நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
கடவட மற்றும் கெரவலப்பிட்டிக்கு இடையிலான நெடுஞ்சாலையில் லொறியின் பின்பகுதியில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்தார்.
காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.