Site icon Tamil News

இலங்கை : பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்!

தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் – ஹொரோவ்பதான தனியார் பயணிகள் பேருந்தும், மிஹிந்தலை கன்னட்டிய பிரதேசத்தில் எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அனுராதபுரம் – கலத்தேவ பிரதேசத்தில் வசிக்கும் 61 வயதுடைய ஓய்வுபெற்ற உப பொலிஸ் பரிசோதகரே உயிரிழந்துள்ளார்.

இந்த பஸ்ஸில் பயணித்த 04 பயணிகளும் காயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பஸ்ஸின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version