Site icon Tamil News

இலங்கை 2024 பொதுத் தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் குறித்து வெளியான அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுத் தேர்தல்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தை கடந்த 24ஆம் திகதி நள்ளிரவு முதல் கலைத்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதன்படி, வேட்புமனு தாக்கல் அக்டோபர் 4 முதல் 2024 அக்டோபர் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நடைபெறும், அதே நேரத்தில் புதிய பாராளுமன்றம் நவம்பர் 21, 2024 அன்று கூட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

Exit mobile version