இலங்கை

இலங்கை: 17 வயது யுவதி மர்மமான முறையில் கொலை: பொலிஸார் தீவிர விசாரணை

எல்பிட்டி – தலாவ பகுதியிலுள்ள தேயிலை தோட்டத்தில் இருந்து நேற்று (09) 17 வயது யுவதியின் சடலம்

மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி தமது சகோதரியின் கணவருடன் வசித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த யுவதி மீண்டும் தமது வீட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபருக்கு எதிராக யுவதியும் அவரது தாயும் கடந்த 6 ஆம் திகதி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக சென்று கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டி ஒன்றில் வந்த யுவதியின் சகோதரியின் கணவர் அவரை மீண்டும் அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் அவர் தொடர்பில் எந்தவித தகவலும் கிடைத்திருக்கவில்லை என அவரது உறவினர்கள் காவல்நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில், சகோதரியின் கணவருடன் குறித்த யுவதி வசித்து வந்ததாக கூறப்படும் எல்பிட்டி – தலாவ பகுதியிலுள்ள தேயிலை தோட்டமொன்றிலிருந்து யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் யுவதியின் கொலையுடன் தொடர்புடையவர்களை தேடி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content