Site icon Tamil News

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் உயிருக்கு அச்சுறுத்தல்: அதிகரிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அரசாங்க புலனாய்வு அமைப்புகள் எச்சரித்ததை அடுத்து அவருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதை அடுத்து தமக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.

எனவே, அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் அம்பலப்படுத்தியமை, விளையாட்டுத்துறை சமூகத்தினரிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தேசத்தின் பிரியமான விளையாட்டை பாதித்ததாகக் கூறப்படும் தவறான நிர்வாகம் மற்றும் நெறிமுறையற்ற நடைமுறைகளை இந்த வெளிப்பாடுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

Exit mobile version