Site icon Tamil News

வடக்கு இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

வடக்கு காசா பகுதியில் உள்ள அனைவரும் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் தெற்கு நோக்கி இடம்பெயர வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வடக்கு இஸ்ரேல் பிராந்தியத்தில் வெடிக்கும் யுத்த அச்சுறுத்தல் காரணமாக அங்கு வாழும் இலங்கையர்களை அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் விசேட அறிவித்தல் விடுத்துள்ளார்.

ஹமாஸுக்கு எதிராக தரைவழித் தாக்குதல் நடத்தும் நோக்கில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையால் காசா பகுதியின் பாதி மக்கள் அல்லது 1.1 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version