Site icon Tamil News

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

காஸாவில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக இலங்கையர் எவரேனும் இலங்கைக்கு வர விரும்பினால் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு போதிய நிதி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்றுடனான விசேட கலந்துரையாடலில் தூதுவர் தெரிவித்தார்.

இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவும் இஸ்ரேலில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

இதேவேளை, இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு நிவாரணம் வழங்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, 011 796 63 96 என்ற தொலைபேசி இலக்கம், 076 746 33 91 என்ற வாட்ஸ்அப் இலக்கம் அல்லது opscenga@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக உங்களது தேவைகளை சமர்ப்பிக்கவோ அல்லது தேவையான தகவல்களை அறிந்து கொள்ளவோ ​​முடியும்.

Exit mobile version