போர்த்துகீசிய சிறையில் இருந்து தப்பிய ஒரு ஆபத்தான இங்கிலாந்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்கு ஸ்பெயின் போலீசார் பிரிட்டிஷ் விடுமுறைக்கு வருபவர்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களுக்காக மார்க் ரோஸ்கேலர் என்ற நபருக்கு 09 வருடங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
லிஸ்பனுக்கு அருகிலுள்ள அல்கோன்ட்ரேவில் உள்ள வேல் டி ஜூடியஸ் சிறைச்சாலையில் இருந்து வெகுஜன உடைப்பைத் தொடர்ந்து தப்பி ஓடிய ஐந்து கைதிகளில் அவரும் ஒருவர்.
ரோஸ்கேலரும் மற்ற நான்கு தப்பியோடியவர்களும் எல்லையைத் தாண்டி கோஸ்டாஸ் அல்லது அதற்கு அருகாமையில் மறைந்திருக்கக்கூடும் என்று போர்த்துகீசிய அதிகாரிகள் நம்புகின்றனர்.
ஆகவே அவர்களை பிடிக்க பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.