Site icon Tamil News

ஸ்பெயின் விவசாயிகள் முக்கிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம்

ஸ்பெயின் விவசாயிகள் இன்று நாட்டின் சில முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடைகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

மற்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள சக ஊழியர்களுடன் சேர்ந்து அதிக செலவுகள், அதிகாரத்துவம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளின் போட்டிக்கு எதிராக இவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் தங்கள் டிராக்டர்களுடன் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெற்கில் செவில்லி மற்றும் கிரனாடா முதல் பிரெஞ்சு எல்லைக்கு அருகிலுள்ள ஜிரோனா வரை நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

“விவசாயிகள் இல்லாமல் உணவு இல்லை” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் ஏற்பட்ட முற்றுகைகள் சில சமயங்களில் காவல்துறையினருடன் வன்முறை மோதல்களாக அதிகரித்துள்ளன.

Exit mobile version