Site icon Tamil News

ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண நிதி ஸ்பெயின் வெளியிட்ட அறிவிப்பு

ஐ.நா. பாலஸ்தீனிய அகதிகள் நிறுவனமான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனத்திற்கு ஸ்பெயின் கூடுதலாக 3.5 மில்லியன் யூரோக்கள் உதவி அனுப்புவதாக அறிவித்துள்ளது.

அக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேலுக்குள் நடந்த ஹமாஸ் தாக்குதலில் 12 ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவன ஊழியர்கள் பங்கேற்றதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் தங்கள் நிதி உதவியை அதிரடியாக நிறுத்திய பின்னர் குறிப்பிடத்தக்க நிதி பற்றாக்குறை குறித்து நிறுவனம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனால் பலஸ்தீன அகதிகளுக்கு போதிய உணவு கிடைக்காத சூழல் உருவாகலாம் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.

மேற்கு நாடுகளின் இந்த முடிவுக்கு பலஸ்தீனம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஐநா பொதுச் செயலாளரும், மேற்கு நாடுகளின் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version