Tamil News

ஸ்பெயின்: ஆசிரியை மற்றும் சக மாணவர்களை கத்தியால் குத்திய 14 வயது மாணவன்!

ஸ்பெயினில் பள்ளி ஒன்றில் 14 வயது மாணவன் ஒருவன், வகுப்பறையில் தன் ஆசிரியை மற்றும் சக மாணவர்களை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெற்கு ஸ்பெயினின் Jerez de la Frontera நகரில் உள்ள பள்ளி ஒன்றில் காலைவேளையில் வகுப்புகள் தொடங்கும்போது இச்சம்பவம் நடந்துள்ளது.

14 வயது மாணவர் ஒருவர் கையில் கத்தியுடன் வகுப்பறையில் நுழைந்துள்ளார். கண்ணில் பட்டவரை எல்லாம் அவர் கத்தியால் குத்தத் தொடங்கியுள்ளார்.ஆசிரியர்கள் அவரை தடுக்க முயன்றபோது, குறித்த மாணவர் ஆசிரியை ஒருவரின் கண்ணில் கத்தியால் குத்தியுள்ளார். அத்துடன் மேலும் இரு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களையும் அவர் தாக்கியுள்ளார்.

Three teachers and student stabbed 'by teenager on knife rampage' at Spanish  school | The Independent

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து குறித்த மாணவரை கைது செய்தனர். காயமடைந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஆனால் கண்ணில் கத்தியால் குத்தப்பட்ட ஆசிரியை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர் பீதியடைந்துள்ளனர்.

தாக்குதல்தாரி மாணவர் தற்போது Jerez பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Exit mobile version