Site icon Tamil News

தென்கொரியாவின் பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்த ஜனாதிபதி : எதிர்கட்சிகளுடன் வலுக்கும் மோதல்!

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் அந்நாட்டின் பாராளுமன்ற கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.

1980 களின் பிற்பகுதியில் இராணுவ சர்வாதிகாரத்திலிருந்து நாடு ஜனநாயகத்திற்கு மாறியதில் இருந்து ஜனாதிபதி ஒருவர் மேற்கொள்ளும் மோசமான நடவடிக்கையாக இது குறிப்பிடப்படுகிறது.

உயர் அதிகாரிகள் மற்றும் அவரது மனைவியின் தவறான குற்றச்சாட்டுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் இடம்பெற்று வரும் சண்டையின் விலைவாக யூன் இவ்வாறு நடந்துகொண்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதற்கிடையில் மோசமடைந்து வரும் வேலைச் சந்தை, உயரும் வீட்டுக் கடன் மற்றும் மருத்துவச் சேவைகளை முடக்கும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களின் நீண்டகால வேலைநிறுத்தம் ஆகியவற்றைக் கையாள்வதில் அவரது அரசாங்கத்தின் திறனைப் பற்றிய கவலைகள் வளர்ந்து வருவதால், யூன் அங்கீகார மதிப்பீடுகள் சரிவை எதிர்கொள்கிறார்.

இந்நிலையில் சட்டமன்றத் திறப்பு விழாவைத் தவிர்ப்பதற்கான அவரது முடிவைப் பற்றி கேட்டதற்கு, யூனின் அலுவலகம், யூனை அழைப்பதற்கு முன், சட்டமியற்றுபவர்கள் முதலில் “தேசிய சட்டமன்றத்தை இயல்பாக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

Exit mobile version