Site icon Tamil News

நியூசிலாந்து அணிக்கு 358 ரன்கள் இலக்கு வைத்த தென்னாப்பிரிக்கா அணி!

தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (01.11) நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதன்படி  நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 04 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்தது.

தென்னாபிரிக்க இன்னிங்ஸ் சார்பாக குயின்டன் டி கொக் 114 ஓட்டங்களையும், ரஸ்ஸி வாண்டர் டுசன் 133 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதேவேளை இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 358 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஓட்ட எண்ணிக்கையுடன், தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 300 ஓட்டங்களைக் கடந்தது இது 8ஆவது தடவையாகும்.

Exit mobile version