Site icon Tamil News

தென்னாப்பிரிக்காவில் எரிவாயு கசிவு: 16 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் உள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் இருந்து நச்சு நைட்ரேட் வாயு கசிந்ததில் மூன்று குழந்தைகள் உட்பட குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் போக்ஸ்பர்க்கில் உள்ள ஏஞ்சலோ குடியிருப்பில், சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களால் தங்கம் உருக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அங்கு வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் இருந்து நைட்ரேட் என்ற விஷ வாயு கசிந்தது. இதனால் அங்கு 1, 6, 15 வயது குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.

மயக்கமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, 24 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது, ஆனால் 16 பேர் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டனர்.

இது குறித்து உள்ளூர் அவசரகால பேரிடர் மேலாண்மை குழுவின் செய்தி தொடர்பாளர் வில்லியம் நட்லாடி கூறுகையில், “குடிசை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டரில் இருந்து நைட்ரேட் விஷ வாயு வெளியேறியதே விபத்துக்கு காரணம்” என்றார்.

Exit mobile version