Site icon Tamil News

விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது Sora AI!

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் (CTO) மிரா முராட்டி தெரிவித்துள்ளார். இந்த நவீன உலகத்தில் AI தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் OpenAI நிறுவனம், அதன் ChatGPT தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட OpenAI நிறுவனத்தின் டெக்ஸ்ட்-டு-வீடியோ ஜெனரேஷன் கருவியான Sora AI-ஐ கடந்த மாதம் அதன் தலைமை அதிகாரி (CEO) சாம் ஆல்ட்மேன் உலகளவில் அறிமுகப்படுத்தி இருந்தார். இந்த Sora AI தளமானது பயனர்கள் கேட்கும் தரவுகளை வைத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் வீடியோ தயார் செய்து கொடுக்கிறது. இதுதொடர்பான 60 வினாடி வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டது.

இதனால் Sora AI தொழில்நுட்பம் தான் தற்போது உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது. அற்புதமான திறன்களைக் கொண்ட இந்த Sora AI டூல், text prompts மூலம் வீடியோக்களை உருவாக்கும் திறன் இருப்பதால் சமூக ஊடக பயனர்களைக் வெகுவாக கவர்ந்துள்ளது. ஆனால், சோரா ஏஐ கருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில், OpenAI நிறுவனத்தின் Sora AI டூல் இந்த ஆண்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா முராட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மிரா முராட்டி கூறியதாவது, Sora AI-ஐ மேலும் பல்வேறு அம்சங்கள் மேம்படுத்தி ஒரு சிறப்பான விடியோ உடன் ஆடியோவையும் வழங்கும் வகையில் கொண்டுவந்துள்ளோம். இதுபோன்று எளிமையான text prompts மூலம் ஒரு அற்புதமான வீடியோக்களை விரைவாக உருவாக்கும் திறனையும் மேம்படுத்தியுள்ளோம்.

விசுவல் கலைஞர்கள், டிசைனர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர்களுக்கு மட்டுமே தற்போது Sora AI-ஐ பயன்படுத்த முடியும். எனவே, இந்த ஆண்டு Sora AI டூல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என்று உறுதிப்படுத்தினார்.

மேலும், ஓபன் ஏஐ, தனியுரிமை மற்றும் நெறிமுறைகளுக்கு மதிப்பளிப்பதாகவும், பொது பிரபலங்கள் குறித்த விடியோக்களை உருவாக்காது எனவும் கூறிய அவர், பயனர்கள் கொடுக்கும் தரவுகள் மூலம் உருவாகும் வீடியோ, ஏஐ உருவாக்கிய வீடியோ என்பதை குறிக்கும் வகையில் வாட்டர்மார்க் பதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version