Site icon Tamil News

பிரான்ஸில் தாய்க்கு மகன் செய்த கொடூரம்

பிரான்ஸ் – துலூஸ் நகரில் 90 வயதுடைய மூதாட்ட கத்திக்குத்துகளிற்கு இலக்காகி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாயை கொலை செய்த 59 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தொடர்ச்சியாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும் தன் தாயின் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தொடர்ச்சியான விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றே குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்தமை என்ற ரீதியிலேயே இவரது மகன் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

ஆனாலும் பொலிஸாரிடம் எந்த ஆதாரங்களோ அல்லது வாக்குமூலங்களோ இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகள் உடற்கூற்றுப் பகுப்பாய்வின் பின்னரே தொடர முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக இவரைக் பொலிஸ் காவலில் வைப்பதற்கும் நீதிமன்ற உத்தரவு பெறப்படல் வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

பிரான்ஸில் தாய்க்கு மகன் செய்த கொடூரம்

பிரான்ஸ் – துலூஸ் நகரில் 90 வயதுடைய மூதாட்டி கத்திக்குத்துகளிற்கு இலக்காகி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாயை கொலை செய்த 59 வயதுடைய மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தொடர்ச்சியாகக் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும் தன் தாயின் கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தொடர்ச்சியான விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றே குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்தமை என்ற ரீதியிலேயே இவரது மகன் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

ஆனாலும் பொலிஸாரிடம் எந்த ஆதாரங்களோ அல்லது வாக்குமூலங்களோ இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகள் உடற்கூற்றுப் பகுப்பாய்வின் பின்னரே தொடர முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக இவரைக் பொலிஸ் காவலில் வைப்பதற்கும் நீதிமன்ற உத்தரவு பெறப்படல் வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version