Site icon Tamil News

இத்தாலியில் இறந்த தன் தாயை உறைவிப்பான் பெட்டியில் மறைத்து வைத்த மகன்

இறந்த தன் தாயை உறைவிப்பான் பெட்டியில் மறைத்து வைத்த மகன் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாலிய பொலிஸார் வீட்டைச் சோதனையிட்ட போது, உறைவிப்பான் பெட்டியில் தாயை கண்டுபிடித்தனர்.

54 வயது மகன் தாயின் ஓய்வூதியத்தை பெற மறைத்து வைத்தார்.

இத்தாலியின் Sardinien தீவை சேர்ந்த 54 வயது நபர் ஒருவர் தனது மறைந்த தாயை சில ஆண்டுகளாக ஆழ்ந்த உறைவிப்பான் பெட்டியில் மறைத்து வைத்திருந்தார்.

அதனால் அவர் தனது தாயின் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டார் என்று இத்தாலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இறந்த 78 வயதான தாயாருக்கு என்ன நடந்தது என்று அயலவர்கள் சந்தேகம் கொள்ள, பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார்.

இங்கு வீட்டின் தரை தளத்தில் உறைவிப்பான் பெட்டியை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

Sarroch நகரைச் சேர்ந்த மகன் மீது இப்போது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

54 வயதானவர், அவரது இறந்த தாயை வைத்து பல ஆயிரம் யூரோக்கள் சம்பாதித்ததாக முதல் விசாரணைகள் காட்டுகின்றன.

அவர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றுநோய்களின் போது இறந்துவிட்டார் என்று நம்பப்படுகிறது.

ஆனால் பெண் இயற்கையாக இறந்திருக்கலாம்.

பிரேதப் பரிசோதனைதான்  மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version