Site icon Tamil News

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த படையினர் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு!

பாகிஸ்தானின் அமைதியற்ற மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள காவல் நிலையங்கள், ரயில் பாதைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் மீது பிரிவினைவாத தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதல்களுக்கு  பாதுகாப்புப் படையினரின் பதிலடி கொடுத்த நிலையில், பலியானோரின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.

மூலோபாய துறைமுகம் மற்றும் தங்கம் மற்றும் தாமிரச் சுரங்கம் போன்ற முக்கிய வளங்கள் நிறைந்த தென்மேற்கு மாகாணத்தின் பிரிவினையை வென்றெடுப்பதற்கான பல தசாப்த கால முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல்கள் பாகிஸ்தானில் அராஜகத்தை உருவாக்க நன்கு திட்டமிடப்பட்ட திட்டம்” என்று உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.

Exit mobile version