Site icon Tamil News

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஆறாவது போராளித் தளபதி மரணம்

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) யின் ஆறாவது மூத்த தலைவர் உயிரிழந்துள்ளார்.

காசாவில் இருந்து சரமாரியாக ஏவப்பட்ட ராக்கெட்டுகளைத் தொடர்ந்து, அவற்றில் சில ஜெருசலேம் அருகே சென்றன.

எகிப்தின் மத்தியஸ்தத்தில் உடனடியான போர்நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

எவ்வாறாயினும், பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த பாலஸ்தீனிய அதிகாரி , எகிப்திய அதிகாரிகள் இன்று மாலை போர் நிறுத்தத்திற்கான புதிய திட்டத்தை முன்வைத்ததாகவும், இஸ்ரேலின் பதிலுக்காக அவர்கள் காத்திருப்பதாகவும் கூறினார்.

காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அவர்களில் பாதிப் பேர் பொதுமக்கள்.

செவ்வாய்கிழமை அதிகாலை இஸ்ரேல் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் இருந்து, மூன்று உயர்மட்ட PIJ தளபதிகள் கொல்லப்பட்டனர் என அங்குள்ள பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் கூறுகிறது. மேலும் 111 பேர் காயமடைந்துள்ளனர்.

அதே காலகட்டத்தில் பாலஸ்தீனிய ராக்கெட் தாக்குதலில் ஒரு இஸ்ரேலிய குடிமகன் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேலின் மேகன் டேவிட் அடோம் (MDA) ஆம்புலன்ஸ் சேவை கூறுகிறது.

Exit mobile version