Site icon Tamil News

இலங்கை: கெஹலிய குடும்ப உறுப்பினர்களின் பதினாறு நிலையான வைப்பு கணக்கு முடக்கம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் குடும்ப உறுப்பினர்களின் 16 நிரந்தர வைப்பு கணக்குகள் மற்றும் மூன்று காப்புறுதிக் கொள்கைகளை முடக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விண்ணப்பத்தின் பேரில் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முடக்கப்பட்ட நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் காப்பீட்டு பாலிசிகளின் மதிப்பு ரூ. 93.125 மில்லியன்.

இதன்படி, கெஹலியவின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு சொந்தமான 16 நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் மூன்று காப்புறுதிக் கொள்கைகள் ஏழு நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளன.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் ரம்புக்வெல்ல தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 53(1) இன் படி, பிரிவு 42 இன் கீழ் நடத்தப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக, கணவன், மனைவி, குடும்ப உறுப்பினர்கள் அல்லது வேறு யாரேனும் நபர்களிடம் இந்த முடக்க உத்தரவு லஞ்ச ஆணைக்குழுவால் பெறப்பட்டது.

Exit mobile version