Tamil News

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல பாடகர் காலமானார்

பிரபல பாடகர் உஸ்தாத் ரஷீத் கான் காலமானார். இந்திய கிளாசிகல் மற்றும் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பாடி புகழ்பெற்ற ரஷீத் கான் பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களில் பாடல்களை பாடி புகழ் பெற்றவர்.

மேலும் இந்திய கிளாசிகல் மற்றும் ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பல ஆல்பம் பாடல்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.

55 வயதான ரஷீத் கானின் மறைவை கேள்விப்பட்ட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் ரஷீத் கான் மறைவிற்கு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரஷீத் கானின் உடல் இன்று மாலை 6 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு கொல்கத்தாவின் பீஸ் ஹேவனுக்கு அனுப்பப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நாளைய தினம் குடும்ப முறைப்படி அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version