Site icon Tamil News

சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையின் கிளையொன்றை கொழும்பில் திறக்க நடவடிக்கை!

சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையின் கிளையொன்றை கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவும் திட்டம் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையை விட பெரிய மருத்துவமனை கொழும்பில் கட்டப்பட உள்ளது என அவர் கூறியுள்ளார்.

அந்த நிலத்தில் சர்வதேச அளவில் பெரிய பல்கலைக்கழகம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் காலி முகத்திடலைச் சுற்றியிருந்த போராட்ட நிலைமை காரணமாக அந்த முதலீட்டாளரின் வருகை பின்னுக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், அந்த முதலீட்டாளர்களை ஆர்வத்துடன் துறைமுக நகருக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version