தன் இசையால் உலகத்தமிழர்களின் உள்ளம் கவர்ந்த இளம்பாடகியாக உருப்பெற்று, ஈழத்தமிழர்களின் அடையாளமாய் இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசைநிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி, நேற்றையதினம் நாடுதிரும்பிய “ஈழத்தின் இசைக்குயில்” கில்மிஷாவை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று, நேரில்சென்று வாழ்த்தி மதிப்பளித்தார்.