Site icon Tamil News

பம்பலப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு !

பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் இன்று (07) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வேனில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள், பம்பலப்பிட்டி, மரைன் டிரைவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version