Site icon Tamil News

ஜேர்மனியில் கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம்

ஜேர்மன் நகரமொன்றில் அமைந்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ஜேர்மனியிலுள்ள Sindelfingen நகரில் அமைந்துள்ள மெர்சிடிஸ் பென்ஸ் கார் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில், நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், அங்கு பணியாற்றும் ஒருவர் பலியாகியுள்ளார், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக Ludwigsburg நகர் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Exit mobile version