Site icon Tamil News

சிங்கப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பெண்களின் மோதல்

சிங்கப்பூரில் ஃபேரர் பார்க் குடியிருப்பு பகுதியில் இரண்டு பெண்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில், ஒருவருக்கொருவர் பொருட்களை வீசி எறிந்து கொண்டதால் அது வன்முறை மோதலாக மாறியது.

47 மற்றும் 49 வயதுடைய அவர்கள் இருவருக்கும் சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

ரங்கூன் சாலையில் உள்ள 23B சிங் அவென்யூவில், 18ஆம் திகதி இரவு 10:40 மணிக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

இரண்டு பெண்களுக்கிடையேயான இந்த வாக்குவாதம் பொறாமை காரணமாக ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருவரும் ஒருவரையொருவர் எதிர்கொண்டபோது அது வாக்குவாதமாக வெடித்ததாகவும் ஷின் மின் நியூஸ் தெரிவித்தது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version