Site icon Tamil News

தங்கள் உறவுகளை ஸ்பொன்சர் செய்து எடுக்க காத்திருக்கும் பிரித்தானியர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

பிரித்தானியாவில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள், தங்கள் துணையை அல்லது உறவினரை ஸ்பொன்சர் செய்வதற்கான தகுதி வரம்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதன்படி குறைந்தபட்ச வருடாந்திர ஊதியத்தில் உயர்வு ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய  தற்போது GBP 18,600ஐப் பெறுபவர்கள், அடுத்த வருடத்தில் (2024) இருந்து 29,000 பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தொகை வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளவர்லி, திறமையான தொழிலாளர் விசா வழிக்கான குறைந்தபட்ச சம்பளத் தேவையைப் போலவே GBP 38,700 ஆக உயரும் என்று கூறினார்.

அதேபோல் குறைந்த பட்ச வருமான தேவை அதிகரிக்கும் என உள்துறை அமைச்சர் லார்ட் ஆண்ட்ரூ ஷார்ப் கூறினார்.

 

Exit mobile version