Site icon Tamil News

ஜெர்மனியில் அதிர்ச்சி – மாணவனும் மாணவியும் எடுத்த விபரீத முடிவு

கிழக்கு ஜெர்மனி பகுதியில் இரண்டு மாவணர்கள் தற்கொலை செய்துக் கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கிழக்கு ஜெர்மனியின் ஓர் நகரமான கிறைஸ் வெல்ட் என்ற பிரதேசத்தில் அமைந்து இருக்கின்ற அலெக்ஸ்சான்டர்புல் குன்வோல்ட் என்று சொல்லப்படுகின்ற ஜிம்நாஸ்டியத்தில் கல்வி கற்ற ஒரு மாணவி மற்றும் மாணவன் 2 பேரும் ஒரு வாரமாக காணாமல் போயுள்ளனர்.

குறித்த மாணவன் மாணவியை பொலிஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது இந்த 2 மாணவர் மாணவிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது இவர்களுடைய இறந்த உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் இறந்த மாணவர்கள் தற்கொலை செய்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் பின் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனோவியல் ரீதியான உதவிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சானது முடிவு எடுத்துள்ளது.

Exit mobile version