Site icon Tamil News

கொழும்பில் பெண்ணுக்கு நபர் செய்த அதிர்ச்சி செயல்

கொழும்பு ஆதுருப்பு வீதியில் பெண் ஒருவரை பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

நேற்று முன்தினம் காலை சந்தேகநபர் பெண்ணை முச்சக்கர வண்டியில் ஏற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவத்தை எதிர்கொண்ட பெண் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் எனவும் அந்த திருமணத்தில் அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ வைத்த நபருடன் அவர் நெருங்கிய உறவை பேணி வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண்ணை முச்சக்கரவண்டியில் ஏற்றி தீ வைத்து எரித்துள்ளார். பின்னர் பெண் கீழே இறங்கி வீதியில் ஓடியதுடன், பிரதேசவாசிகள் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஆதுருப்பு வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பாத்திமா சுமேதா என்பவரே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

சந்தேகநபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன், பணம் கேட்டு வழங்கப்படாத சம்பவத்தின் அடிப்படையில் இந்த தீவைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.

தற்போது அவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
You sent

Exit mobile version