தனது சிறுநீரகத்தை விற்று ஏழு இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு அந்த பணத்தை பயன்படுத்தி ஐஸ் மருந்துகளை வாங்கி விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பகுதியில் வைத்து பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் வியாபாரத்தை ஆரம்பிக்க பணம் இல்லாததால் தனது சிறுநீரகத்தை விற்றதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நபர் பெப்ரவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.