Site icon Tamil News

கென்யாவில் குழந்தையை திருடி விற்ற மருத்துவமனை ஊழியரால் அதிர்ச்சி

மருத்துவமனை ஊழியர் ஒருவர் குழந்தையைக் கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில் – நைரோபி நகரின் Mama Lucy Kibaki மருத்துவமனையில் பணிபுரிந்த Fred Leparan குழந்தையை விற்க ஒப்புக்கொண்டது.

மருத்துவமனையின் பராமரிப்பிலிருந்த ஆண் குழந்தையை அவர் 2,500 டொலருக்கு விற்க ஒப்புக்கொண்டார்.

BBC Africa Eye விசாரணைக்குப் பின் அவர் 2020ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

மருத்துவமனை ஊழியர் செலினா அவூர் (Selina Awour) மீதும் குழந்தை புறக்கணிப்புக்காக 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இம்மாதம் 26ஆம் திகதி இருவருக்கும் தண்டனை விதிக்கப்படும்.

Exit mobile version