Site icon Tamil News

இலங்கையில் அதிர்ச்சி – 17 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி

மின்னேரிய பிரதேசத்தில் கழுத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 17 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்னேரிய யாய 04 கிரித்தலே பகுதியில் நேற்று (14) இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி தனது குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த பெண்ணுடன் காதலில் ஈடுபட்டிருந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version