Site icon Tamil News

இலங்கையில் அதிர்ச்சி – அயல் வீட்டாருடன் மோதலில் ஈடுபட்டவர் அடித்துக் கொலை

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்பங்குவ பகுதியில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை ​செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றுக்குள் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

33 வயதான ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வந்த நிலையில், வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் மதுபோதைக்கு அடிமையான ஒருவர் எனவும் அயல் வீட்டாருடன் மோதலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இந்தக் கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version