Tamil News

கேரளாவில் அதிர்ச்சி… மனைவி, 3 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்துகொண்ட கணவன்!

கேரளத்தில், குடும்பப் பிரச்சினை காரணமாக மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை இரக்கமின்றி கொலை செய்த ஒரு நபர், தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஜண்டுபாறையை சேர்ந்தவர் ஜெய்சன் தாமஸ். பூவரணி கொச்சுக்கொட்டாரம் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்த இவருக்கு கடன் தொல்லை மற்றும் குடும்பப் பிரச்சினைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்துக்குள் அடிக்கடி சண்டையும் சச்சரவுமாக இருந்திருக்கிறது.

இந்த நிலையில், ஜெய்சன் நேற்று தனது மனைவியையும் 10 வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

How do I become a forensic investigator in California? Crime Scene  Investigation in San Diego

தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் ஐந்து பேரில் சடலங்கை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெய்சன் தாமஸ் இத்தகையை முடிவெடுக்க என்ன காரணம் என்பது குறித்து விசாரித்து இதுவரை உறுதியான தகவல்கள் ஏதும் தெரியவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் பொலிஸார், கடன் பிரச்சினை காரணமா அல்லது வேறு ஏதும் பிரச்சினையா என விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ஒரே சமயத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கேரள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version