Site icon Tamil News

ஹைதராபாத்தில் அதிர்ச்சி… வீடு புகுந்து 5 மாதக் குழந்தையைக் கடித்துக் கொன்ற தெருநாய்!

வீடு புகுந்து 5 மாதக்குழந்தையை நாய் கடித்துக் கொன்ற சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள விகாராபாத் மாவட்டத்தில் தந்தூர் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பாபுசாய் என்ற ஐந்து மாதக் குழந்தையை பெற்றோர் கடைக்குச் செல்லும் போது வீட்டில் தூங்க வைத்துள்ளனர்.

இதன்பின் அருகில் கடைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது நாய் கடித்து குழந்தை உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

குழந்தையைக் கொன்றது தெருநாய் என்று அந்த வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.

Exit mobile version