Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி – பொது மக்கள் மீது கத்திக்குத்து – நால்வர் காயம்

ஆஸ்திரேலியா – மெல்போர்னில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று மணி நேரத்திற்குள், விக்டோரியா பொலிஸாரால் பல இடங்களில் கத்தி தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை கைது செய்ய முடிந்தது.

இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், இது பயங்கரவாத செயற்பாடு அல்ல என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து இனி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version