Site icon Tamil News

உலகக் கிண்ண தொடரில் இருந்து ஷகிப் அல் ஹசன் விலகல்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன் உலகக் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தனது இடது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி டெல்லியில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்யும் போது ஷகிப் காயம் அடைந்தார்.

போட்டிக்கு பிந்தைய எக்ஸ்ரே, அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதை உறுதிசெய்தது, இதன் விளைவாக, புனேவில் நவம்பர் 11 அன்று அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பங்களாதேஷ அணியின் இறுதிப் போட்டியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

Exit mobile version