Tamil News

பாலியல் புகார்… மோகன்லால் உட்பட 17 பேர் அடுத்தடுத்து இராஜினாமா

மலையால திரையுலகில் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார் அதிகரித்து வந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் உட்பட 17 பேர் கூண்டோடு இராஜினாமா செய்துள்ளனர்.

மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இது குறித்து விசாரணை செய்ய ஹேமா கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த கமிஷன் சமீபத்தில் அறிக்கையை வெளியிட்ட நிலையில் அந்த அறிக்கையில் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருப்பது உண்மைதான் என்று தெரியவந்தது.

இதன் தொடர்ச்சியாக ஒரு சில நடிகைகள் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நிலையில், மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மலையாள நடிகர்கள் மீதான பாலியல் புகார் குறித்து ஆலோசிக்க இன்று சங்கம் கூடுவதாக இருந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால் உட்பட 17 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது மலையாள திரை உலகிரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Exit mobile version