Site icon Tamil News

சிங்கப்பூர் லிட்டில் இந்தியா வீரசாமி வீதியில் நடைபெற்ற ரெய்டு-ஒரு மில்லியன் டாலர் சிக்கியது

சிங்கப்பூர் வணிக திணைக்கள அதிகாரிகள் கடந்த மே 5 மற்றும் மே 11ம் திகதிகளில் வீரசாமி வீதி மற்றும் அப்பர் டிக்சன் வீதி ஆகிய இடங்களில் நடத்திய சோதனை நடவடிக்கையின் பொழுது 26 மற்றும் 64 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள் முறையான அனுமதி இன்றி பணப்பரிவர்த்தனை நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்கள்.

இவ்வாறு 7 பேர் கைது செய்யப்பட்டார்கள். இவர்களிடம் இருந்து சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துலாளர்கள்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு $125,000 குற்றப்பணம், மூன்று வருட சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

Exit mobile version