Site icon Tamil News

செர்பிய எதிர்க்கட்சித் தலைவருக்கு பெல்கிரேட் இரகசியப் படையினரால் கொலை மிரட்டல்

பெல்கிரேட் இரகசியப் படையினர் “தன்னை அடித்து, சித்திரவதை செய்து, அவமானப்படுத்தி, தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக” செர்பிய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அவர் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

செர்பிய குடியரசுக் கட்சியின் தலைவரான நிகோலா சாண்டுலோவிக், 10 நாட்களுக்கு முன்பு அவர் தனது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும், உளவுத்துறையால் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக வன்முறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால், அவர் இடது பக்கம் செயலிழந்து, நரம்பு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

Exit mobile version