Site icon Tamil News

பிரேசில் பாடசாலையில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூடு – சிறுமி மரணம்

பிரேசிலின் Sao Paulo நகரில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாணவர்கள் மூவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர், மற்றோர் உயர்நிலைப் பாடசாலையைச் சேர்ந்த மாணவர் என தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்தனர். சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஒரு மாணவனும் காயமடைந்தார்.

மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை.

தாக்குதல் அதிர்ச்சியைத் தந்ததாக சாவ் பாவ்லோ மாநில ஆளுநர் கூறினார். அண்மையில் பிரேசிலில் பள்ளிகளில் இடம்பெறும் தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Exit mobile version