பிரான்ஸில் அடுத்தகட்டக் கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட திகதியை விட முன்னதாகவே இதன் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளது.
முதலில் இந்தத் தடுப்பூசி திட்டம் 15ம் திகதி ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கும் என சுகாதார அமைச்சினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கொரோனாத் தொற்று மிகவேகமாகப் பரவுவதால், முதலே கொரோனத் தடுப்பூசடூகள் போட்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள், தொடர்சியான கடும் நோய் உள்ளவர்கள், உடல் பருமனானவர்கள், கர்ப்பிணிப பெண்கள் போன்றோரே முதற்கட்டத் தொகுதித் தடுப்பூசிகள் போடத் தகுதியானவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்ததுடன் மேற்கண்டவர்களை உடனடியாகத் தடுப்பூசிகளைப் போடுமாறும் அறிவுறுத்தி உள்ளது