அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்டப் படிப்புகள் நாளை முதல் ஆரம்பமாகின்றன.
உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த டிசம்பர் 23ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
சமூக வலைதளங்களில் உயர்தர வேளாண் அறிவியல் தாள் கசிந்ததால் வினாத்தாளை ரத்து செய்துவிட்டு மீண்டும் பரீட்சை பெப்ரவரி முதலாம் திகதி நடத்த பரீட்சைத் திணைக்களம் முடிவு செய்திருந்தது.
அதன்படி, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடங்க இருந்த அடுத்த பாடசாலைதவணை நளை வரை ஒத்திவைக்கப்பட்டது.