Site icon Tamil News

மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ள சவுதி மன்னர்

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் “அதிக வெப்பநிலை”(காய்ச்சல்) மற்றும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் இரண்டாவது சுற்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சோதனைகள் ஜெட்டாவில் உள்ள அல்-சலாம் அரண்மனையில் உள்ள கிளினிக்கில் நடைபெறும் என்று அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

அரசர் சல்மான் “அதிக வெப்பநிலை மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுகிறார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழு உடல்நிலையைக் கண்டறியவும், அவரது உடல்நிலையை உறுதிப்படுத்தவும் சில சோதனைகளை நடத்த முடிவு செய்தது.”

88 வயதான மன்னர் சல்மான், 2015 ஆம் ஆண்டு முதல் அரியணையில் இருந்து வருகிறார், இருப்பினும் அவரது மகன் முகமது பின் சல்மான், 38, 2017 இல் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டு, அன்றாட ஆட்சியாளராக செயல்படுகிறார்.

மன்னரின் உடல்நிலை மிகவும் அரிதாகவே விவாதிக்கப்படுகிறது, ஆனால் ராயல் கோர்ட் ஏப்ரல் மாதம் அவர் கிங் பைசல் சிறப்பு மருத்துவமனையில் “வழக்கமான பரிசோதனைகளுக்காக” அனுமதிக்கப்பட்டார் என்பதை வெளிப்படுத்தியது. அன்றைய தினமே அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.

Exit mobile version