Tamil News

ஹமாஸ் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதல் : இஸ்ரேலில் சிக்கிய திரைப்பட நடிகை

திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொள்ள இஸ்ரேல் மசென்ற பிரபல நடிகை ஹமாஸ் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலில் சிக்கி தவித்துள்ளார் என தெரிவிக்கப்பகின்றது.

தொலைபேசியில் கூட தனது குடும்பத்தினரை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை, இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பினர் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த கொடூரமான சம்பவத்தில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மற்ற உலக நாடுகளும் இதை பின்பற்றி வரும் நிலையில், இஸ்ரேலுக்கு இந்தியாவின் முழு ஆதரவையும் தெரிவித்தார்.

பிரபல பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா இஸ்ரேலில் சிக்கியதாக தெரிகிறது. ஹைஃபா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்ற அவர் கவலையான தருணங்களை அனுபவித்தார்.

இருப்பினும் இந்திய தூதரகத்தின் உதவியுடன் நுஷ்ரத் தற்போது அபுதாபி வழியாக இணைப்பு விமானம் மூலம் இந்தியாவுக்குத் திரும்பும் வழியில் பாதுகாப்பாக உள்ளார்.

தமிழில் மறைந்த சேது, சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த ‘வாலிப ராஜா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நுஷ்ரத் பருச்சா. ‘ராம் சேது’ உட்பட பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

Exit mobile version