Site icon Tamil News

சனத் நிஷாந்தவின் மரணம் நாட்டிற்கு பேரிழப்பாகும்!!! மகிந்த கவலை

சனத் நிஷாந்தவின் மரணம் கட்சிக்கும், தேசத்திற்கும், நாட்டுக்கும் பேரிழப்பாகும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராச்சிக்கட்டுவில் இடம்பெறவுள்ளன.

இன்று மாலை 6 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை பொரளையில் உள்ள தனியார் மலர்சாலை ஒன்றில் சடலத்தை வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் நாளை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அவரது காரியாலயத்திற்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டு இறுதிக்கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆராச்சிக்கட்டுவ – ராஜகடலுவ கத்தோலிக்க மயானத்தில் இடம்பெறும்.

மேலும், மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வீட்டிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்ற போது, ​​இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மகன் தனது தாயின் கண்ணீரை துடைக்கும் காட்சிகள் பல சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

Exit mobile version