Site icon Tamil News

சஜித்தின் மாநாடு திடீரென ஒத்திவைப்பு

எதிர்க்கட்சித் தலைவரும் சமகி ஜன பலவேக தலைவருமான திரு.சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் நடைபெறவிருந்த கூட்டு சுகாதார சங்கத்தின் மாநாடு இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய இருபது சுகாதார வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டதே அதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநாடு காலை 09.00 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது, ஆனால் 10.30 மணி வரை தொடங்குவதற்கு போதிய ஆட்கள் இல்லாததால் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டது.

சுமார் இரண்டாயிரம் சுகாதார நிபுணர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் மாநாடு பிற்போடப்பட்டதாகவும், மீண்டும் நடத்தும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

Exit mobile version