Site icon Tamil News

சஜித் மற்றும் தயாசிறி சந்தித்துப் பேச்சு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ள அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தயாசிறி ஜயசேகர தனது எதிர்கால அரசியலை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து ஜயசேகர நீக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version