Tamil News

சாய் பல்லவிக்கு திருமணம்? உண்மை வெளியானது…

நடிகை சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சாய் பல்லவிக்கு திருமணம் நடந்துவிட்டதாக வைரலான போட்டோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி. முதன்முறையாக மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து ரசிகர்களை வசீகரித்த சாய் பல்லவி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக நடிக்கத் தொடங்கினார்.

தனுஷுடன் மாரி, சூர்யாவுடன் NGK என டாப் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார்.

அதேபோல், தெலுங்கில் நானி, நாக சைதன்யா, மலையாளத்தில் துல்கர் சல்மான், ஃபஹத் பாசில் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.

இதனையடுத்து தற்போது சிவகார்த்திகேயனின் SK 21 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்த சாய் பல்லவி, அடுத்த ஷெட்யூலுக்காகவும் ரெடியாகிவிட்டாராம். தற்போது வெளியான ஒரு போட்டோ, கோலிவுட்டையே பரபரப்பாக்கிவிட்டது.

அதாவது சாய் பல்லவி இளைஞர் ஒருவருடன் மாலையும் கழுத்துமாக ஜோடியாக இருக்கும் போட்டோ தான் அது. மேலும், “இறுதியாக சாய் பல்லவி தனது காதலனை கரம் பிடித்தார். காதலுக்கு நிறம் முக்கியம் இல்லை என்பதை சாய் பல்லவி நிரூபித்துவிட்டார்” என கேப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த போட்டோவை உண்மை என நம்பிய ரசிகர்கள், சாய் பல்லவிக்கு திருமணம் ஆகிவிட்டதா என அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஆனால், இந்த போட்டோ உண்மைதான் என்றும், இது சாய் பல்லவியின் திருமண புகைப்படம் இல்லையென்பதும் தெரியவந்துள்ளது. சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படத்தின் பூஜை விழாவில் எடுக்கப்பட்ட போட்டோவான இதில், சாய் பல்லவிக்கு அருகில் இருப்பது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என்பதும் தெரியவந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட குரூப் போட்டோவில் இருந்து, சாய் பல்லவியையும் ராஜ்குமார் பெரியசாமியையும் மட்டும் எடிட் செய்து இந்த தகவல் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version