Site icon Tamil News

ரஷ்ய அதிபர் தேர்தல் ; முதன்முறையாக வாக்களிக்கும் உக்ரைன் பகுதி மக்கள்

ரஷ்ய தேர்தலில் வெற்றி பெற்று விளாடிமிர் புடின் 5வது முறையாக ஜனாதிபதியாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவில் தற்போது ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில் ரஷ்யா மட்டுமின்றி, அந்நாட்டுடன் இணைக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளில் உள்ள மக்களும் முதல் முறையாக வாக்களிக்கின்றனர்.

11 நேர மண்டலங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலை பல எதிர்க்கட்சி பிரமுகர்கள், உக்ரைன் போர் குறித்த பொதுக் கருத்தை அறியும் ஒரு வழியாக பார்ப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 114 மில்லியன் ரஷ்யர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், மக்கள் ஒவ்வொரு நாளும் 12 மணிநேரம் என 3 நாட்கள் வாக்களிப்பது இதுவே முதல் முறை ஆகும்.

Exit mobile version